வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு...!! பக்தர்கள் பரவசம்!!

 
ஸ்ரீரங்கம்

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம்  அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து விழாவாகவும் கொண்டாடப்பட்டது.பகல்பத்து திருநாள் ஜனவரி 1ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம்

இதனையடுத்து ராப்பத்து விழா 2ம் தேதி தொடங்கியது, விழாவின் முதல் நாளன்று பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைபெற்றது. ( ராப்பத்து விழாவின் பொழுது தினமும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ) நேற்றையதினம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து விழாவின் 10ம் நாளான்று  தீர்த்தவாரி வைபவமானது வெகுவிமரிசையாக  நடைபெற்றது. நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, நீல் நாயக்க பதக்கம், வைர அபயஹஸ்தம், தங்க பூணூல் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தடைந்தார்.

ஸ்ரீரங்கம்

பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கியபடி சின்ன நம்பெருமாள் சந்திர புஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். தீர்த்தவாரிக்கு பிறகு  திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நம்பெருமாள் பக்தர்களுக்கு இரவு முழுவதும் காட்சி அளித்தார். நேற்று இரவு முழுவதும் திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நம்பெருமாள்,  இன்று அதிகாலை நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து அதன்பிறகு  வைகுண்ட ஏகாதசி திருவிழா இனிதே முடிவடைந்தது.

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.- திருப்பாவை

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web