வைரல் வீடியோ!! ”நானே ஓசில தான் குடிச்சேன், பைன் எல்லாம் கட்டமுடியாது”!! இளம்பெண் போலீசாரிடம் ரகளை!!

 
பைன்

இரவு நேரங்களில் பார்ட்டி, மீட்டிங், பப் என ஆண்கள் சுற்றித்திரிந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் பெண்கள் தான் சோஷியல் லிவிங் வாழ்க்கையில் இரவு நேரங்களில் பல இடங்களில் போதையில் சுற்றி திரிவதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இப்படி சுற்றி திரிபவர்களை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

பைன்

குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் விபத்தை தவிர்க்கும் வகையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் போட்டும் அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுப்பர் . அத்துடன் குறிப்பிட்ட நபரின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.இந்நிலையில் சென்னையில் இளம்பெண் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்தார். அவரை மறித்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.  இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்  இளம்பெண் போலீசாரிடம் அபராதம் கட்ட பணமில்லை .  ஊதுனா வண்டி தரேன்னு தானே சொன்னீங்க என் வண்டிய குடுங்க நான் போறேன்  என வாக்குவாதத்தில் போலீசாரிடம் மல்லுக்கு நிற்கிறார்.


காலையில் வந்து வாகனத்தை எடுத்து செல்லுங்கள் எனக் கூற, என்று அந்த பெண் ரகளையில் ஈடுபடுகிறார். நானே ஓசில தான் குடிச்சிட்டு வர்றேன் . எங்கிட்ட அபராதம் போட்டா எப்படி? என்கிறார். பின்னர்  யார் தான் சார் குடிக்கல, நானே டெய்லி குடிச்சிட்டு தான் வண்டி ஓட்டிட்டு போறேன். அப்போ எல்லாம் பிடிக்கல; இப்போ ஏன் பிடிக்கிறீங்க ? . உங்க வீரத்தை பொண்ணுங்க கிட்ட தான் காட்டுவீங்களா? என கலாட்டா செய்கிறார். போலீசார் செய்வதறியாமல் திகைத்து நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web