அடுத்த 3 நாட்களுக்கு கவனமா இருங்க!! காலையில் பனிமூட்டம், மிதமான மழை!!
தமிழகத்தில் நேற்று வட மாவட்டங்களில் நள்ளிரவில் மழை பெய்துள்ளது. இந்த மழையும், காலை பனிமூட்டமும் மேலும் 3 நாட்கள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும்.
அதன்படி இன்று முதல் ஜனவரி 8 ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் மையப்பகுதியிலும் , புறநகர்ப் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!