போகிக்கு என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?! முழு தகவல்கள்!!

 
போகி

போகி என்றதால் போக்குதல். நம்மிடையே உள்ள தீய எண்ணங்களை போக்குதல் என்பது பொருள். அதே நேரம் வீட்டில் உள்ள அவசியமற்ற பொருட்களை நீக்குதல். பொங்கலுக்கு முதல் நாளான இன்று வீட்டில் இருக்கும் பழைய குப்பைகளை அப்புறப்படுத்தி அழகு செய்ய வேண்டும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது பழமொழி.  போகிப் பண்டிகை தினத்தில்  போளி, வடை, பாயசம் இவைகளை  இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம்.

அத்துடன்  நாளை தைமகளை வரவேற்கும் வகையில்  விடிய விடிய விளக்கேற்றி கடவுளை வரவேற்க வேண்டும். அத்துடன் வீடுகளில்  காப்புக் கட்டுவர். காப்புக்கட்டு என்பது அந்த காலத்தில் மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. விஷக்கடி, அலர்ஜி, வயிற்றுப்போக்கு என அடிக்கடி வரும் பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக வைப்பது தான் காப்பு கட்டு.  காப்புக் கட்டும் போது அதில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகளை வைத்து கட்டுவர்.  காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகளை விட்டு விட்டனர். 

போகி

முன்பெல்லாம் இயற்கை சார்ந்த அதாவது ப்ளாஸ்டிக் சேர்க்காத பொருட்களை தீயிலிட்டு எரிப்பர். இதனால் காற்று மாசுபாடு என்பதே கிடையாது. ஆனால் தற்போதைய நாட்களில் அனைத்திலும் ப்ளாஸ்டிக் மயம் தான். இவைகளை எரிப்பதால் உருவாகும்  நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

போகி பண்டிகை திருநாளான இன்று வீடுகளை சுத்தம் செய்து சமையல் அறையில் அரிசி மாவினால் கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். அத்துடன்  அரிசி, பருப்பு, புளி, மிளகாய், சர்க்கரை இவைகளை தனித்தனி  கிண்ணங்களில் போட்டு வைத்து சிறிய விளக்கேற்றி வைக்கலாம்.  அணையாத விளக்காக இருந்தால் கூடுதல் சிறப்பு. மறந்தும் கூட இந்த நாளில் வீட்டை அசுத்தமாக விட்டுவிட வேண்டும். அத்துடன் வீட்டில் இருக்கும் நெய், தயிர், உப்பு இவைகளை கடன் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் மகாலட்சுமி வீட்டை விட்டு போய்விடுவாள் என்பது ஐதீகம். அதனால் மறந்தும் இவைகளை கடன் கொடுத்துடாதீங்க

போகி

பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல .நமது உடல் ஆரோக்கியத்திற்கும் அதுதான் மிகவும் நல்லது . நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் சுற்றுச்சூழல்  நல ஆர்வலர்கள். இந்நிலையில்  நடப்பாண்டில் போகி பண்டிகைக்கு எரிப்பது குறித்து கன்னியாகுமரி கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உருவாக்கி வைத்தனர்.  

போகி தினத்தில் வீடு சுத்தம் செய்து மாலையில் நடுவீட்டில் விளக்கேற்றி வைக்கலாம்.  வீட்டில் கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள்  இறந்து போய் இருந்தால் அவர்களை நினைத்து புத்தாடை வாங்கி படையல் இடலாம். அறிவியல் ரீதியாக  ஜனவரி மாதம் என்பது மழைக்காலம் முடிந்து குளிர் அதிகரிக்கும் காலம் என்பதால்  நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகம் . அதனால் வீடு முழுக்க மஞ்சள், சாணம் தெளித்து சாம்பிராணி, தூபம் போட வேண்டும். 
பச்சரிசியில் மாக்கோலம் இ்ட்டு  வீட்டு வாசலில் காப்பு கட்டலாம்.  இந்த மூலிகை கொத்தில் கட்டாயம் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, தும்பை, பிரண்டை, துளசி இருப்பது சிறப்பு. வீடு மட்டுமல்ல நமது மனதில் உள்ள  தீய எண்ணங்களை எரிக்க வேண்டும் என்பது தான் தாத்பரியம். 
இன்றைய தினம் தெய்வங்களை வரவேற்று வணங்கும் நாள். இந்த நாளில் மாமிசம் சாப்பிடுதல், போதை வஸ்துக்கள், பகல் உறக்கம் தவிர்க்க வேண்டும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web