தடுப்பு கம்பியில் மோதி இளைஞர் உயிரிழப்பு!! நேர்முகத் தேர்வுக்கு சென்ற போது பரிதாபம்!!
கன்னியாகுமரி மாவட்டம் பணிக்கன்குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகன் 25 வயது அஜித் பட்டதாரி. அஜீத் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர விண்ணப்பித்து இருந்தார். நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்ததையடுத்து பைக்கிலேயே பெங்களூரு சென்றார். அதன்பிறகு பைக்கிலேயே பெங்களூரில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இந்த நெடுந்தொலைவு பயணத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த போது பைக் தடுப்பு கம்பியில் மோதியது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அஜீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் அஜித் அதிவேகமாக பைக்கை ஓட்டிவந்ததே விபத்திற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நேர்முகத் தேர்வுக்கு சென்ற வாலிபர் வழியிலேயே விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!