16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... அக்கா கணவர் உட்பட இருவரை போக்சோவில் தட்டித்தூக்கிய காவல்துறை!

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய் தந்தை இல்லாத சூழலில் 16 வயது சிறுமி ஒருவர் அக்கா உறவுமுறை உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அக்கா கணவர் பிரேம்குமார் தான் இதற்கு காரணம் என்றும் அதற்கு உடந்தையாக அவருடைய காதலன் சக்திவேல் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து இருவரை தேடி வந்த நிலையில், தற்போது இருவரையும் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!