தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி!! கதறித் துடித்த பெற்றோர்!!

 
ஷகிப்

அந்த காலத்தில் 10, 15 பிள்ளைகளை அசால்ட்டாக வளர்த்து விட்டனர். இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்று அல்லது இரண்டு தான். அதையே கண்ணும் கருத்துமாக கவனிக்கவில்லை எனில் பல நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றனர். வெட்டவெளியில் சுற்றி திரிந்து அந்த கால பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். தடுக்கி விழுந்தால் பக்கத்து வீடு எதிர்வீடு, திறந்த மோட்டார்கள், கிணறுகள், தண்ணீர் தொட்டிகள்  என காணும் இடம் எல்லாம் பெற்றோர்களுக்கு பயம் தான். வீடுகளுக்குள் அவர்களை கட்டுப்படுத்தவும் வழியின்றி பரிதாபமாக கலங்கி தவிக்கின்றனர் பெற்றோர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி ஆரோக்கிய நகர் மீனவ கிராமத்தில் வசித்து வருபவர்  சுஜின்.இவர்  மீன்பிடித்தல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மேரி வர்ஷா. இந்த தம்பதிக்கு  3 வயதில் ஷகிப் சேன்டினோ என்ற மகனும்,  ஒன்றரை வயதில் ஒரு மகளும் இருந்தனர். சுஜின் கடலுக்கு சென்ற நிலையில், வீட்டில் குழந்தைகள், மேரி வர்ஷா மற்றும் அவரது தாயார் வசித்து வந்தனர்.  வர்ஷா கடைக்கு சென்ற போது மகன் ஷகிப் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். வெளியே சென்றிருந்த மேரி வர்ஷா வீட்டிற்கு திரும்பியபோது மகனை காணவில்லை. அக்கம் பக்கம் என பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

ஷகிப்
உறவினர்கள், நண்பர்கள் என விசாரித்தனர். எங்கேயும் குழந்தை வரவே இல்லை. இவர்களின் குடியிருப்பு பகுதியில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு கிரகப்பிரவேசம் நடந்தது. அந்த வீட்டின் கேட் திறந்த நிலையில் இருந்தது. இதனால் ஷகிப்  அங்கு போயிருக்கலாமோ என சந்தேகத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தனர்.அங்கு வீட்டின் முன் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் காணப்பட்டது. தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது ஷகிப் மூழ்கிய நிலையில் கிடந்தான். கதறித் துடித்த தாய் உடனே மீட்டு அருகில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ்
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  தகவல் அறிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்   ஷகிப் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடி கொண்டிருந்த குழந்தை சற்று நேரத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web