பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்!! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

 
பாலியல் வன்கொடுமை

இந்தியாவின் வட பகுதிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறு குழந்தை தொடங்கி வயதான பாட்டி வரை எந்த பெண்ணும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. அந்த வகையில் தலைநகர் டெல்லி ரோஹினி பகுதியில் வசித்து வருபவர் தனது  4 வயது மகளை  மே மாதம் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தார். மே 9ம் தேதி அந்த சிறுமி பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

பாலியல்

அந்த பள்ளியில் ப்யூனாக பணிபுரியும் 43 வயது சுனில் குமார் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்த சிறுமி பயத்தில் கத்தி அழத் தொடங்கினார். இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார். அன்று மாலை சிறுமி வீட்டில் தாயிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் தனக்கு தொல்லை கொடுத்த நபருக்கு பெரிய மீசை இருந்தது என அடையாளம் கூறியுள்ளார்.  

போக்சோ நீதிமன்றம்

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் பள்ளியில் 13 ஆண்டுகளாக பணிபுரியும் ப்யூன் சுனில் குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் சுல்தான்பூரி பகுதியில் வசித்து வருகிறார். சுனில் குமார் கைது செய்து சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அந்த ப்யூன்  இதற்கு முன்னர் வேறு சிறுமிகளுக்கு இதுபோல தொல்லை கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த சிறுமிக்கு கவுன்சிலிங்க் அளிக்கப்பட்டு வருகிறது. 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web