வாலுடன் பிறந்த பெண் குழந்தை... 6 செ.மீ நீளம் வளர்ந்ததால் மருத்துவர்கள் குழப்பம்!
பிரேசிலில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு, முதுகில் ஆறு சென்டிமீட்டர் நீளத்தில் வால் இருப்பதைக் கண்டுபிடித்தது மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாவ் பாலோவில் உள்ள கிரெண்டாக் என்ற குழந்தைக்கு, முதுகுத்தண்டு மற்றும் இடுப்புப் பகுதியை இணைக்கும் லும்போசாக்ரல் பகுதியில் இருந்து வால் மேல்நோக்கி வளர்ந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
அந்த குழந்தை, ஸ்பைனா பிஃபிடா என்ற அரியவகை பாதிப்புடன் பிறந்தார் என்பது சோதனையில் உறுதியானது. இது முதுகுத் தண்டு சாதாரணமாக வளர்ச்சியடையத் தவறும்போது ஏற்படும் பாதிப்பு என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிறவி இயலாமை அவளது முதுகுத்தண்டில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது, இதன் விளைவாக வால் வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இது ஒரு "மனித போலி வால்" என கண்டறியப்பட்டது. இது ஒரு வால் போன்ற தோற்றமளிக்கும் ஆனால் முதுகெலும்பு பிரச்சினைகள் அல்லது கட்டிகள் தோன்றும் எனவும் கூறினர்.
அறுவைசிகிச்சை மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தை முதுகில் வளர்ந்திருந்த தோலால் மூடப்பட்ட பின்னிணைப்பை அகற்றினர். வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாலை அகற்றி அதனால் ஏற்பட்ட துளையை மருத்துவர்கள் மூடினர்.
ஓஹியோவில் உள்ள கரு மற்றும் நஞ்சுக்கொடி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பிரேசிலிய மருத்துவர்களுடன் இணைந்து அதை ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறுகையில், கருவின் காடால் முதுகெலும்பு டிஸ்ராபிஸங்களுடன் (ஸ்பைனா பிஃபிடா) தொடர்புடையவை. எனவே அதன் இருப்பு முதுகெலும்பு குறைபாடுகளை கவனமாக பரிசோதிக்க வேண்டும். பல சாத்தியமான முரண்பாடுகள் சரியான சிகிச்சையைத் திட்டமிடுவதற்கும் நல்ல தரமான ஆலோசனைகளை வழங்குவதற்கும் முக்கியமானதாகும்.
வலி, மேலும் வளர்ச்சி, எரிச்சல் அல்லது முறிவு போன்ற பாதிப்புகள் மற்றும் சிக்கல்களைத் தடுக்க அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடியும் எனவும் அவர்கள் கூறினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க