7 மாடி உயரத்திற்கு பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்... நியூயார்க்கில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுமார் 7 மாடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விழாக்காலக் கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளன.
நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் சென்டர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம், சுமார் 50 ஆயிரம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. அதன் உச்சியில் பிரகாசமாக ஒளிரக்கூடிய ஒற்றை நட்சத்திரமும் வைக்கப்பட்டுள்ளது.

ராக்பெல்லர் சென்டரில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் பல ஆண்டுகால பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் கடந்த 1931-ஆம் ஆண்டு, ராக்பெல்லர் சென்டர் கட்டிடப் பணியின்போது புலம்பெயர்ந்து வந்த கட்டிடத் தொழிலாளர்கள் சிலர் சேர்ந்து கிறிஸ்துமஸ் மரத்தை வைத்துப் பண்டிகையைக் கொண்டாடினர். அதன்பிறகு, 1933-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த வழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
