கோவை வந்த மும்பை பேராசிரியை பாலியல் பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டிய வங்கி அதிகாரி !!

 
பேராசிரியை

கோவை ஓட்டலில் மும்பை பேராசிரியையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கேரள வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த திருமணம் ஆன 43 வயது பெண், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், 2ஆவது பி.எச்டி. பட்டம் பெறுவதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு சென்றார்.

அங்கு ஒரு வங்கியில் கணக்காளராக இருக்கும் பாலக்காட்டை சேர்ந்த கோபி குமார் (43) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. கோபி குமார் வங்கியில் பணம் எடுக்க அந்த பேராசிரியைக்கு உதவியுள்ளார்.

பேராசிரியை

பேராசிரியை மும்பை திரும்பிய பிறகு, வங்கி செலானில் குறிப்பிட்டிருந்த பேராசிரியையின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கோபி குமார் பேசினார். அப்போது, நான் உங்களிடம் நட்பை தொடர விரும்புகிறேன். தொடர்ந்து பேசலாமா?’’ என கேட்டு அடிக்கடி பேசி வந்தார். 

இந்த நிலையில் பேராசிரியை, பிஎச்டி படிக்க கோவை வருவதாக கூறினார். இதை கேட்ட கோபி குமார், நானும் உங்களை பார்க்க கோவை வருகிறேன், எனக்கூறியுள்ளார். அதன்படி கடந்த 2021 ஜனவரி மாதம் இருவரும் காரில் பாரதியார் பல்கலைக்கழகம் சென்றனர். பின்னர்  உறவினர் வீட்டுக்கு செல்லலாம் எனக்கூறி அந்த பெண்ணை கோபிகுமார்  அழைத்து சென்றார்.  

ஆனால் அவர் காளப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று அறை எடுத்து தங்க வைத்தார். அங்கே அவர், பேராசிரியையிடம், நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது எனக்கூறி அவரது கழுத்தில் மஞ்சள் கயிறை  கட்டிவிட்டார். இதை எதிர்பார்க்காத பேராசிரியை அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் அவர் மும்பை சென்று விட்டார்.

பேராசிரியை

வங்கி அதிகாரி இதோடு விட்டுவிடாமல், பாலியல் வன்கொடுமை செய்ததை போட்டோ, வீடியோ எடுத்துள்ளதாக பேராசிரியையிடம் கோபிகுமார் கூறி, அடிக்கடி கோவைக்கு வரவழைத்து அத்துமீறியதாக தெரிகிறது. இதனால் பேராசிரியைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போதும் விடாமல் கோபிகுமார் டார்ச்சர் செய்ததால் பேராசிரியை, பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். 

இதையடுத்து  ஆபாச போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டுதல், பாலியல் பலாத்காரம் போன்ற பிரிவில் கோபிகுமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web