பெரும் அதிர்ச்சி... பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து... 12 பேர் பலியான சோகம்!

 
விபத்து

மும்பையில் தனியார் பேருந்து ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில், 12 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பேருந்தில் 40 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

மகாராஷ்டிரா  மாநிலம் புனேவில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று, மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பாஜி பிரபு வாடக் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 40 பேர்  பயணம் மேற்கொண்டிருந்தனர். புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, அதிகாலை நேரத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளத்தில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.

Accident

புனே நெடுஞ்சாலையில், ராய்கட் மாவட்டத்தின் கோபோளி என்ற இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த போது அதிகாலை 4.30 மணி அளவில் இந்த விபத்து நேர்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Maharashtra

விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோம்நாத் கார்கே, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.  உயிரிழந்த 12 பேருமே 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web