பாலத்தில் பைக் மோதி கோர விபத்து !! 2 பேர் பலி!!
மதுரை மாநகர் வடக்குமாசி வீதியில் இருளப்ப கோனார் சந்து பகுதியில் வசித்து வருபவர் சந்தான கிருஷ்ணன். இவரது மகன் 22 வயது ஆனந்த கிருஷ்ணன் . தல்லாகுளம் மூக்கப்பபிள்ளை தெருவில் வசித்து வருபவரின் மகன் ஸ்ரீனிவாசன் பாபு. இவர்கள் இருவரும் மதுரை கள்ளந்திரி பகுதியில் உள்ள அவர்களது நண்பரின் கிணற்றில் குளித்துவிட்டு பைக்கில் மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பறக்கும் பாலத்தின் மேல் அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது அவுட்போஸ்ட் அருகே மேம்பாலத்தின் பக்கவாட்டுசுவர் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆனந்தகிருஷ்ணன் சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அதே போல் மேம்பாலத்தில் இருந்து பறந்து சென்று கீழே விழுந்து சீனிவாசன் தலை சிதறி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர்கள் சிறியதாக இருப்பாதலும், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமல் இருப்பதாலும், இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாத நிலையிலும் இருப்பதால் தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள்,வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் விபத்துக்களும், அதனால் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!