ஓட்டம் பிடித்த நோயாளிகள்!! டாக்டர் இவனுக்கு ஊசி போடுங்க!! பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பாம்புபிடி வீரர்!!

 
கருநாகப் பாம்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கிருத்திகா என்பவர் வீடு கட்டிவருகிறார். அங்கு குளியலறை கட்டுமான பணி நடைபெறும் இடத்தின் உள்ளே, 6 அடி நீள கருநாகப் பாம்பு இருப்பதைக் கண்டு கிருத்திகா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் குவிந்தனர்.

எனினும் கருநாகம் என்பதால் அச்சமடைந்த மக்கள் அதனை அடிக்க முயற்சிக்கவில்லை. பின்னர் இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் பாண்டியனுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பாண்டியன் வீட்டில் பதுங்கியிருந்த பாம்பினை லாவகமாக மீட்டு எடுத்தார்.

கருநாகப் பாம்பு

கட்டுமானப் பணி இடிபாடுகளில் பாம்பு இருந்ததால் பிடிக்க முயன்றபோது, பாம்புக்கு  கடப்பாரை பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் பாம்பிற்கு சிகிச்சை அளிக்க முடிவு பாண்டியன் செய்தார். அதன்படி வனத்துறை அனுமதி பெற்று சீர்காழியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பாம்பினை எடுத்துச் சென்று அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் செல்லத்துரையிடம் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.

கருநாகப் பாம்பு

தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் உதவியாளர் ராஜா  அடிபட்ட பாம்பிற்கு சிகிச்சை அளித்தார். இதனையடுத்தே பாம்பை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதிக்கு பாதுகாப்பாக விடப்பட்டது. கால்நடை மருத்துவமனைக்கு பாம்புக்கு சிகிச்சை அளிக்க பாம்பை எடுத்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web