பகீர் வீடியோ... காரை வழிமறித்து தம்பதி மீது கொடூரத் தாக்குதல்... கதறும் இளம்பெண்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரத்தில் சாலையில் நடந்த ஒரு சாதாரண வாக்குவாதம், தம்பதியரிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முகுந்த்நகர் பகுதியில் நண்பர்களுடன் இரவு உணவு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அமல்தேவ் ராமன் மற்றும் அவரது மனைவி கேதகி மீது, மதுபானம் அருந்திய ஆண்கள் குழு தாக்குதல் நடத்தியது. காரை வழிமறித்த அந்த கும்பல், ஹார்ன் அடித்ததற்காக அமல்தேவ் மீது தாக்குதல் நடத்தினர்.
வீடியோவிலும் சாட்சிகளாலும் உறுதி செய்யப்பட்டபடி, அந்த கும்பலில் இருந்த 6 பேரில் ஒருவர், கேதகியை காயப்படுத்தினர். அத்துடன் மற்றவர்கள் அமல்தேவை கல்லாலும் கம்பியாலும் அடித்தனர். இந்த கொடூரத் தாக்குதலில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, அமல்தேவ் மூக்கு முறிவு, காது கீறல் என படுகாயங்களுடன் சைஷ்ரீ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகாரின் பேரில் தாக்குதலில் தொடர்புடைய அனில் லொந்தே (50), ராஜ் லொந்தே (20), வினாயக் காக் (55) மூவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். “நான் என் பகுதியை பெருமையாக நினைத்த பெண்; இன்று வீட்டை விட்டு வெளியே வர பயமாக இருக்கிறது. ரோட்டில் நின்றவர்கள் வீடியோ எடுத்தார்கள் – ஆனால் ஒருவரும் நம்மை காப்பாற்றவில்லை. மனிதநேயமே இல்லையா?” என கேதகி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கதறி அழுதுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!