பெரும் சோகம்... மாடி படிக்கட்டு கம்பி வழியே தவறி விழுந்து குழந்தை துடிதுடித்து பலி!

 
வித்யா
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில்   தாம்பரம், மணிமங்கலம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர்  35 வயது பாலகுமாரன்.  இவருக்கு வித்யா என்ற 30 வயதுடைய மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு 2 பெண்கள் குழந்தைகள்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில், வித்யா துணிகளை காயவைக்க, இரண்டரை வயது 2வது மகள் ஆருத்ராவுடன், குடியிருப்பின் 4 வது மாடிக்கு சென்று இருக்கிறார். அச்சமயம், மாடி படிக்கட்டு கம்பி வழியே குழந்தை தவறி விழுந்துவிட்டது.  

ஆம்புலன்ஸ்
 
வித்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

போலீஸ்

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து  காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web