மண்ணில் விளையாடிய குழந்தை கல்லை விழுங்கியதால் பரிதாப உயிரிழப்பு... கதறித் துடித்த பெற்றோர்!
கேரள மாநிலம், மலப்புரம்: தெக்குமூரி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை, தவறுதலாக மண்ணில் இருந்த சிறிய கற்களை விழுங்கிய போது தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹ்ரூப் மற்றும் அவரது மனைவி ருமானாவின் மகன் அஸ்லம் நூஹ், வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்தது.

குடும்பத்தினர் உடனடியாக சங்கரம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். ஆனால் உடல்நிலை மோசமாக இருப்பதால், சிறப்பு சிகிச்சைக்காக கொட்டக்கலையில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், அஸ்லம் நூஹ் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்கள் கூறியதாவது, தொண்டையில் கல் சிக்கியதால் ஏற்பட்ட கடுமையான சுவாசக் கோளாறுதான் மரணத்தின் காரணம்.

சங்கரம்குளம் போலீசார், மூச்சுத்திணறலால் ஏற்பட்ட மரணம் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். தேவையான நடைமுறைகள் முடிந்ததும், குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
