கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை... நீதிபதியிடமே புகாரளித்த மாணவி.... பேராசிரியர் கைது!

 
பாலியல் தொழிலாளர்கள்

தமிழகத்தில் சமீப காலங்களாக பள்ளி, கல்லூரி மானவிகளுக்கு பாலியல் தொல்லைகளும், பாலியல் குறித்த குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. வேலியே பயிரை மேய்வதா? என்று இன்னமும் பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம். தைரியமாக சில பெண்கள், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளையும், மிரட்டல்களையும் வெளியே சொல்லி, தண்டனை வாங்கி தருகிறார்கள். இன்னமும் பல அப்பாவி பெண்கள், இந்த காமுகர்களிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களை நம்பாத பெற்றோர், சமூகம், படிக்க தடை விதிப்பார்களோ என்கிற பயம், தன்னுடைய  பெயரும் சட்ட சிக்கல்களில் சிக்கி, கெட்டு விடுமோ என்கிற பதைபதைப்பு என்று நிறைய காரணங்கள் இந்த ஆண்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. அதனால், தைரியமாக இது போன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். தேர்வு மதிப்பெண்களே இவர்களின் அஸ்திரமாக இருக்கிறது. இந்நிலையில், மதுரை அருகே கல்லூரி மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

மதுரை செக்கானூரணி பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அந்த சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி பேராசிரியர் ஜெகன் கருப்பையா, மாணவிகளுக்கு தொடர்ந்து  பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.

மாணவி

இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், தான் பேராசிரியர் ஜெகன் கருப்பையாவால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், தொடர்ந்து தொல்லைகள் தருவதாகவும் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நேரிடையாக பேராசிரியர் மீது புகார் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மதுரை சரக போலீஸ் டிஐஜி பொன்னிக்கு உத்தரவிட்டார். 

மாணவி

இதையடுத்து செக்கானூரணி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், அதே கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா (42), மற்றொரு பேராசிரியர், கல்லூரி மாணவர் ஒருவர் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான பேராசிரியர், மாணவரை தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web