பரபரப்பு... நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை!

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில், பிரபல ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியில் வசித்து வருபவர் வசூல் ராஜா.
இவர் மீது 20க்கும் மேற்பட்ட கொலை கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜாவை வீட்டின் அருகாமையில் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். உடனே தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!