திருமணமாகி ஒரே வருடத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
சம்பத்

பிரபல சின்னத்திரை நடிகர் சம்பத் ஜே ராம் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கன்னட மொழி ரசிகர்களிடையே இவரது  ‘ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ’ தொடர் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று இருந்தது.  நடிகர் சம்பத்  ‘அக்னி சாக்ஷி’  தொடர் மூலமாக கன்னட ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றிருந்த நிலையில், அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

35 வயதாகும் நடிகர் சம்பத்திற்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பெங்களூரு நீலமங்கலா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பத்தின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Sampath J Ram

சம்பத் ஜே.ராம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் தனது கேரியரில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளாலும், போதிய வாய்ப்பு கிடைக்காததாலும் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சம்பத் தற்கொலைச் செய்து கொண்டார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து சம்பத் ஜே ராமின் குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. சம்பத் ஜே ராமின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு குறித்து ராஜேஷ் துருவா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மகனே, உன் பிரிவைத் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை. எத்தனையோ திரைப்படங்கள் உருவாக வேண்டும், நிறைய சண்டைகள் செய்ய வேண்டியிருக்கிறது, உங்கள் கனவுகளை நனவாக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. நாங்கள் இன்னும் உங்களை பெரிய மேடையில் பார்க்க வேண்டும். தயவு செய்து திரும்பி வாருங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web