ரஜினிகாந்த்திற்கு சூடம் ஏற்றி ஆரத்தி காண்பித்த ரசிகர்!

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழக கேரள எல்லையில் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ரஜினிகாந்தை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் அவர் தங்கி இருக்கக் கூடிய ரிசார்ட்டிற்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த்தை பார்க்க வந்திருந்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!