எம்.எல்.ஏ. பாலியல் தொல்லை தாங்கமுடியல.... பெண் அதிகாரி கடிதம் எழுதி தற்கொலை முயற்சி!!

 
சேஜல்

இன்றைய வாழ்க்கை முறையில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தலைமை பதவிகளில் உள்ளனர். பெண்களை எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் பாலியல் தொல்லை என்ற கொடூரம் தொடர்வதை தவிர்க்கவோ, தடுக்கவோ முடியவில்லை. சின்னஞ்சிறு நிறுவனங்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள், அரசியல் பணிகள் என எந்தத் துறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை தான் சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற சம்பவம் நமக்கு எடுத்து காட்டுகிறது.  தெலுங்கானா மாநிலத்தில்  பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற இளம் பெண் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்து  வருகிறார். இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சி மஞ்சரியாலா பெல்லம் பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்க்கம் சின்னய்யா பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சேஜல்

இது குறித்து பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில்   புகார் செய்தார். அந்த புகாரில் துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ அடிக்கடி எனக்கு போன் செய்து நான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும். என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என பேசி தொல்லை கொடுத்து வருகிறார் .   மேலும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் எனது வீட்டிற்கு நேரில் வந்து தொல்லை கொடுத்தனர். நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து மன உளைச்சல் ஏற்படுத்தி வருகின்றனர் என  கூறியிருந்தார். மேலும் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின்  முன்பு போராட்டத்தில்  ஈடுபட்டார். அவரிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது  அவர் எம்.எல்..ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக போராட்டத்தை கைவிடுங்கள் என கூறியதன் பேரில் சேஜல் போராட்டத்தை கைவிட்டார். இதனால் மீண்டும் அவர் ஐதராபாத்திற்கு வந்து பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தொடர்ந்து எம்.எல்.ஏ. அவருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் .  

 

துர்க்கம் சின்னையா

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் அதிகாரி சேஜல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று ஐதராபாத் ஜூப்ளிகில்சில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பெண் அதிகாரி சேஜல் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில்   சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் பெண் அதிகாரி சேஜல் அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மீண்டும் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. மேலும் அவரிடம்  இருந்த பையில் நடத்தப்பட்ட சோதனையில் கடிதம் ஒன்றும் இருந்தது. அதி  துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ.வின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது ஆட்கள் என்னை கொலை செய்ய பார்க்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை கொலை செய்து விடுவார்கள். அவர்களிடமிருந்து என்னை காப்பாற்ற உதவி செய்யுங்கள் என எழுதியுள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web