பயங்கர விபத்து... ஓடும் பேருந்தில் தீ விபத்து... 26 பேர் உடல் கருகி பலியான கொடூரம்!

 
தீப்பிடித்த பேருந்து

மகாராஷ்டிராவில் பயணிகள் பேருந்து ஒன்று யவத்மாலில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் 32 பயணிகள் இருந்தனர்.  இந்த பேருந்து சம்ருத்தி மகாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.  இந்த விபத்தில் இதுவரை 25 பேர் பலியாகி இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  . 7 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீப்பிடித்த பேருந்து

இந்நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால்  மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்ததால், நிலைதடுமாறி பேருந்து சாலையின் டிவைடரில் மோதி தீப்பிடித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தீப்பிடித்த பேருந்து

அத்துடன்  உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த விபத்து குறித்து மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த கோர  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம்   இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50000 ம்  பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web