15 பைக்குகள் தீயில் எரிந்து நாசம் !! வாகன நிறுத்தத்தில் திடீர் தீவிபத்து!!

 
பைக்

நவீனமயமாகிவிட்ட இன்றைய காலத்தில் நாளுக்கு நாள் வாகனங்களில் பெருக்கம் அதிகமாக வருகிறது. எனினும் சாலைகள் இன்னும் அப்படியே உள்ளது. அது வேறுகதை. வாகன பெருக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாகன நிறுத்தங்கள் அதிகரித்து வருகிறது. அங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றால் சந்தேகம்தான்.

பைக்

அப்படியொரு விபரீதத்தால் தீவிபத்து ஏற்பட்டு ஏராளமான பைக்குகள் தீக்கு இறையாகியுள்ளன. மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டம் வசாய், நைகாவ் பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிந்து வாகன நிறுத்தத்தின் பகுதி மற்றும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தது.

தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வாகன நிறுத்தத்தில் வாகனங்கள் மீது பிடித்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் விபத்தில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சுமார் 15 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.

பைக்

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன நிறுத்தத்தில் தீப்பிடித்து இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமான சம்பவத்தால் வசாய் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web