ஆபாச வீடியோவால் சிறுமி பலி!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

 
குணசீலன்

சென்னையில் குணசீலன் என்பவர், வீடுகளில் பேப்பர் போடும் வேலை செய்துவந்தார். இவர் ஒரு வீட்டில் தனியாக வாடகைக்கு தங்கியிருந்து பேப்பர் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் 13 வயது மகளை ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, பயந்துபோய் கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் குளியல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த விசாரணையில் தான் குணசீலன் செய்த சேட்டைகள் அம்பலமானது. இதையடுத்து, போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குணசீலனை போலீசார் கைது செய்யப்பட்டார். 

குணசீலன்

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி, குணசீலனை குற்றவாளி என அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவரை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, அந்த தொகையை, சிறுமியின் பெற்றோருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

குணசீலன்

அபராதத் தொகையை செலுத்த தவறினால், குற்றவாளி குணசீலனின் அசையும், அசையா சொத்துக்கள் மூலம் அபராத தொகையை வசூலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web