அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை தாலுகா கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை சோக சம்பவம் நடந்தது. அங்கு 7ம் வகுப்பு படித்து வந்த மோகித் என்ற மாணவன் பள்ளிக்கு வழக்கம்போல் வந்திருந்தார். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இருந்தபோது கட்டிடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் மோகித் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். சக மாணவர்களும் ஆசிரியர்களும் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் பள்ளி வளாகத்திலும் கிராமத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து அறிந்த மாணவனின் தந்தை சரத்குமார் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். பள்ளி கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பள்ளி கட்டிடம் குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
