அதிர்ச்சி... மெக்காவுக்கு புனித யாத்திரை சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து! 20 பேர் எரிந்து கரிக்கட்டையான சோகம்!

 
சவூதி அரேபியா

சவூதி அரேபியாவின் தென்மேற்கே உள்ள ஆசிர் மாகாணத்தில் புனித யாத்திரை சென்றவர்களுடன் பேருந்து ஒன்று சென்றது. அவர்கள் மெக்கா நகரை நோக்கி பயணித்து உள்ளனர். யாத்ரீகர்களுடன் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். 

சவூதி அரேபியா

அப்போது பேருந்தில் திடீரென பிரேக் பிடிக்காமல் போயுள்ளது. இதனால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் ஓடியுள்ளது. பின்னர் சிறிது தூரத்தில் பாலம் ஒன்றின் மீது மோதி பேருந்து கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. சுற்றிலும் கரும்புகை பரவியதால் பேருந்துக்குள் இருந்த பயணிகள், வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர்.

இந்த கோர விபத்தில் சிக்கி புனித யாத்திரைக்கு சென்ற 20 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 29 பேர் வரை காயமடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சவூதி அரேபியா

பாதிக்கப்பட்டவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web