அதிர்ச்சி.. பொதுத் தேர்வு எழுதி திரும்பிய மாணவி விபத்தில் பலி!

 
தன்ஷிகா

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் எஸ்.ஆர்‌ நகர் பகுதியில் சிங்கராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் தன்ஷிகா தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சுறுசுறுப்பாக தேர்வெழுதி வருகின்றனர். 

தன்ஷிகா

இந்த நிலையில், மாணவி தன்ஷிகாவும் தனது தேர்வை எழுதி இருந்தார். பள்ளிக்கு சென்று பொதுத் தேர்வை எழுதிவிட்டு மாணவி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வஞ்சிபாளையம் அரசு பள்ளியில் பயிலும் தங்கையை அழைத்து வர பைக்கில் சென்றுள்ளார். அதன்படி வஞ்சி பாளையம் நால்ரோடு பகுதியில் எதிரே மாணவி தன்ஷிகா சகோதரருடன் சென்ற பைக் மீது, வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தன்ஷிகா, அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தன்ஷிகா

மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவிட்டு வீடு திரும்பிய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web