நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்... சடலத்தை எடுத்து போக கூட ஆம்புலன்ஸ் வரல... தள்ளுவண்டியில் எடுத்து சென்ற அவலம்!

 
 நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்...  சடலத்தை எடுத்து போக கூட ஆம்புலன்ஸ் வரல... தள்ளுவண்டியில் எடுத்து சென்ற அவலம்!

பீகார் மாநிலத்தில்  தவாய் மொஹல்லாவில் வசித்து வருபவர்   முகமது சத்ருல் ஹோடா. இவரது  மகன் 19 வயது அர்ஷத். அவரது உடல் பாவாபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து பிரேத பரிசோதனைக்காக சதார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்பும், உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ்  கேட்டு குடும்பத்தினர் காத்திருந்தனர்.  மருத்துவமனை நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை.

இதனால் அவர்கள், பெரும் வலியைத் தாங்கிக்கொண்டு, உடலை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றி சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.  இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, சதார் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் குங்குமம் பிரசாத் மனிதாபிமானமற்ற செயலாக இதை கண்டித்து, உடனடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

அவர் தெரிவித்ததாவது, “மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது நமது கடமை. ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காமல் இருந்ததற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் கூறியுள்ளார். இது குறித்த  வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web