பட்டாசு ஆலையில் கொடூர வெடி விபத்து... 18 பேர் உயிரிழப்பு!

 
வெடி விபத்து

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் சம்பவம் நடந்தது. சுமார் பதினெட்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எட்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலும் பெண்கள் என்பதும் கூறப்படுகிறது.

கோதாவரி கால்வாய் அருகே இருந்த ஆலையில் வெடிப்பு ஏற்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு அடர் கரும்புகை பகுதியை மூடியது. வெடிச் சத்தம் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். அருகிலுள்ள பள்ளி கட்டிடத்திலும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விதிமுறைகள் மீறப்பட்டதால்தான் விபத்து நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

Horrific accident A massive blast at a fireworks manufacturing unit in Andhra Pradesh 18 dead, many injured; Fears of death toll rising | भीषण दुर्घटना...! फटाक्यांच्या फॅक्ट्रीत प्रचंड स्फोट १८ जणांचा मृत्यू, अनेक जखमी; मृतांचा आकडा वाढण्याची भीती!

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. மாநில உள்துறை அமைச்சர் அனிதா சம்பவ இடத்துக்கு சென்றார். மாவட்ட அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!