ஆண் வயிற்றில் இரட்டை சிசு... 36 வருடங்களாக தொடரும் சோகம்!

 
சஞ்சு பகத்

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசித்து வருபவர்  சஞ்சய் பகத். இவருக்கு தற்போது வயது 60. இவர் 20 வயது முதலே வயிறு பெரிதாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக தொடங்கி தற்போது மூச்சு விட  முடியாத அளவு வளர்ந்து விட்டது.  1999ல்  வயிறு மிகவும் பெரிதாக தொடங்கிவிட்டது. சமீபகாலமாக  மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால்   மருத்துவமனையில்  பரிசோதனை செய்து கொண்டார்.

சஞ்சு பகத்


அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர். முதலில் வயிற்றில் கட்டி இருப்பதாக தான் மருத்துவர்கள் நினைத்தனர். பின்னர் தான் தெரிந்தது அவரது வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகி இரட்டை ஆண் குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவத் துறையில் அரிதான நிகழ்வு என்கின்றனர் மருத்துவர்கள்.  இதன்பிறகு  சஞ்சய் பகத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சிசு அகற்றப்பட்டது. அப்போது கை கால்கள், தலை மயிர், பிறப்புறுப்பு என உடற்பாகங்களுடன் இரட்டை சிசு  கிடைத்தது.கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் சஞ்சய் பகத் தனது வயிற்றுக்குள் இரட்டை ஆண் சிசுவை சுமந்து வாழ்ந்து வந்தது  பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   

சஞ்சு பகத்

கடந்த 36 ஆண்டுகளுக்கு மேல் சஞ்சு பகத் தனது வயிற்றுக்குள் இரட்டை ஆண் சிசுவை சுமந்து வாழ்ந்துள்ளார். இது  மருத்துவத்துறையில் மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கருவுக்குள்  கரு என்பது மிகவும் அரிதான ஒன்று. இது லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . அறுவைசிகிச்சைக்கு பின்பு தற்போது சஞ்சு பகத் நலமுடன் உள்ளதாகவும், அன்றாட வேளைகளில்  சிரமமின்றி ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web