ஏப்ரல் 28ம் தேதி திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்... !

 
ஸ்டாலின் இபிஎஸ்
 தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏப்ரல்  28ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் தலைமையிலான, கடந்த 47 மாதகால விடியா திமுக ஆட்சியில், தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு பதிலாக, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் கொண்டுவந்து செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நீர்த்துப்போகச் செய்துள்ளதோடு; கிடப்பிலும் போட்டுவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் இபிஎஸ்

இதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், 28.4.2025 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

ஸ்டாலின் இபிஎஸ்
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் எஸ்.எஸ்.வைகைசெல்வன் அவர்கள் தலைமையிலும்; காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. V. சோமசுந்தரம்; குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. மதனந்தபுரம் K. பழனி; மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. போந்தூர் S. செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும்; ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளும்படி  அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web