தொடர்ந்து 250 வருடங்களாக இந்து கடவுள்களுக்கு மரியாதைச் செய்து வரும் இஸ்லாமிய குடும்பம்! காசியில் கோலாகலம்!

 
காசி விஸ்வநாதர் தலைப்பாகை இஸ்லாமியர் குடும்பம் கியாசுதீன்

உலகின் உள்ள அனைத்து மதங்களுமே வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், சென்றடைவது இறைவனைத் தானே.. அதே போல அனைத்து மதங்களுமே அன்பை தானே போதிக்கிறது. அன்பே சிவம் என்பதனைப் போலவே.. மறு கன்னத்தையும் காட்ட சொன்னார் இயேசு. அன்பே அல்லா என்று தொழுகிறார்கள் இஸ்லாமியர்கள். இப்படி ஒரு வருடம்.. இரண்டு வருடங்கள் கிடையாது. தொடர்ந்து 250 வருடங்களாக இந்து கடவுள்களுக்கு மரியாதை செய்து வருகிறது உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய குடும்பம் ஒன்று.

உத்தரபிரதேசத்தில் கங்கை கரையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் வருகின்ற அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி நாளில் சிவபெருமானுக்கு அக்பர் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த பாரம்பரிய திருவிழா பல வருடங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. பக்தர்கள் இந்த தரிசன காட்சியைக் காண்பதற்காகவே பல நாடுகளில் இருந்தும் குறிப்பிட்ட நாளில் கங்கையில் கூடுகிறார்கள். 

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றதை இந்த ஏகாதசி நாளில் வாரணாசியில் இப்படி கொண்டாடுகிறார்கள். சிறப்பு வாய்ந்த அந்த நன்னாளில் காசி விஸ்வநாதரும் பார்வதியும், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பீடத்துடன் தலைப்பாகை அணிந்து கம்பீரமாக வீற்றிருப்பார்கள். இந்த ஆண்டு அந்தப் பீடம் காஷ்மீரில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது.

வாரணாசி

சுமார் 250 ஆண்டுகளாக சிவபெருமானுக்கு இந்த திருவிழாவுக்காக தலைப்பாகை தயாரித்து வழங்கும் பணியை வாரணாசியில் இருக்கும் கியாசுதீனின் குடும்பம், பயபக்தியுடன் விரதம் இருந்து செய்து வருகிறது. பல தலைமுறைகளாக அவர்கள் சிவபெருமானுக்கு அக்பர் தலைப்பாகை செய்யும் கலையில் தேர்ச்சி பெற்று, சேவையாற்றி வருகிறார்கள். 

இது குறித்து பேசும் போது, காசி விஸ்வநாதருக்கு தலைப்பாகை செய்வது பொறுப்புடன் செய்ய வேண்டியது. மரியாதைக்குரிய விஷயமும் கூட. எங்கள் முன்னோர்களால் தொடங்கப்பட்ட இந்த புனித காரியத்தைத் தொடர்ந்து நாங்கள் பின்பற்றி வருவது என் பாக்கியம் என நெகிழ்ச்சியாக கூறுகிறார் கியாசுதீன். ஒரு சேவையாகவே இதைச் செய்கிறோம். லாபம் ஈட்டுவதற்காக அல்ல. இதன் மூலம் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தெய்வத்தின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதாக கருதுகிறோம் என்கிறார்.

வாரணாசி

சிவபெருமானுக்கு அழகிய கலை வேலைப்பாடுகளுடன் அக்பர் தலைப்பாகையை உருவாக்குவதைப் போலவே, பகவான் கிருஷ்ணருக்கும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தலைப்பாகை தயாரித்துக் கொடுப்பதை கியாசுதீன் வழக்கமாக கொண்டுள்ளார்.  

 ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web