நூதன போராட்டம்... சுடுகாட்டுக்குச் செல்ல பாதை போடற வரை ஸ்கூலுக்கு வரமாட்டோம்... மலைகிராமத்தில் வெறிச்சோடிய பள்ளிகள்!

 
நூதன போராட்டம்... சுடுகாட்டுக்குச் செல்ல பாதை போடற வரை ஸ்கூலுக்கு வரமாட்டோம்...  மலைகிராமத்தில் வெறிச்சோடிய பள்ளிகள்!  


தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில்  உப்புத்துறை மலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுடுகாட்டிற்குச் செல்ல பயன்படுத்தி வந்த பாதையை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அடைத்துவிட்டனர்.   இதனால் கடந்த மூன்று மாதங்களாகவே சுடுகாட்டுக்குச் செல்ல பாதை பாதை இல்லாததால் கிராம மக்கள் அவ்வப்போது போராடி வந்தனர்.

தேனி
இந்நிலையில், இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். பள்ளியில் 100 மாணவ மாணவிகள் படிக்கும் நிலையில், 50 மாணவர்கள் மட்டுமே வகுப்பிற்கு வந்தனர்.  இந்நிலையில் பள்ளிக்கு வந்த கிராம மக்கள் 30 மாணவர்களை தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 20க்கும் குறைவான மாணவர்களே வகுப்பறையில் இருந்ததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

நூதன போராட்டம்... சுடுகாட்டுக்குச் செல்ல பாதை போடற வரை ஸ்கூலுக்கு வரமாட்டோம்...  மலைகிராமத்தில் வெறிச்சோடிய பள்ளிகள்!  

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  இது குறித்து ஆண்டிப்பட்டி வட்டாட்சியர்  இது சம்பந்தமாக உப்புத்துறை மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார்.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web