ரயில் நிலைய அதிகாரியின் துணிச்சலால் பயணி உயிர் பிழைத்த நபர்!
கர்நாடக மாநிலம் பாண்டவபுரா ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற முயன்ற போது ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பயணியை நிலைய அதிகாரி அபிஜித் சிங் கண நொடியில் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தச் சம்பவம் பயணிகள் மற்றும் சமூக வலைதளவாசிகளை அதிர்ச்சியிலும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
Alert, brave, and vigilant:
— South Western Railway (@SWRRLY) December 19, 2025
On 13th December 2025, Sri Abhijit Singh, Station Master at Pandavapura, displayed extraordinary presence of mind and unwavering devotion to duty by saving a passenger from a life-threatening situation near moving Train No. 16219. His timely… pic.twitter.com/SNi67odhLd
தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், நிலைய அதிகாரியின் இந்த நடவடிக்கை "விழிப்புணர்வு, தைரியம் மற்றும் எச்சரிக்கை உணர்வின் சிறந்த எடுத்துக்காட்டு" என்றும், அவரது விரைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒரு பெரிய விபத்தைத் தடுக்க உதவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் டிசம்பர் 13, 2025 அன்று நிகழ்ந்தது. ரயில் எண் 16219 நகர்ந்த வேளையில், பையைப் பிடித்து ஏற முயன்ற பயணி தடுமாறி ரயிலுக்கு அருகே வழுக்கி விழ, அபிஜித் சிங் உடனடியாக பதிலளித்து பயணியை பாதுகாப்பாக காப்பாற்றினார். இது ரயிலில் ஏறும் பொழுது ஏற்படும் ஆபத்துகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை என நிரூபிக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
