பகீர்!! குழாயடி சண்டையில் பெண் வெட்டிக்கொலை !! கதறி துடித்த உறவினர்கள்!!

 
பத்மாவதி

கரூர் அருகேயுள்ள திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ- பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியின் வீடு அருகில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க பத்மாவதி சென்றுள்ளார். இவர்கள் வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார்.

பத்மாவதி

அங்கு தண்ணீர் பிடிப்பதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கார்த்தியின் மனைவி அழுதுகொண்டு வீட்டுக்கு சென்று நடந்ததை கார்த்தியிடம் கூறியுள்ளார். உடனே கார்த்தி தனது கறிக்கடையில் வைத்திருக்கும் கறி வெட்டும் அறிவாளை எடுத்துக்கொண்டு, தனது மனைவியை திட்டிய பத்மாவதி வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து வெளியேவந்த இளங்கோவையும், அவரது மனைவி பத்மாவதியும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையில் பலமாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பத்மாவதி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரூர் போலீசார் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், தப்பி ஓடிய கறிக்கடை உரிமையாளர் கார்த்தியை கைது செய்தனர். தெருவில் குழாய் சண்டை கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web