பரபரக்கும் அரசியல் வட்டாரம்!! எம்பி மகன் திடீர் கைது!! அமலாக்கத்துறை அதிரடி!!

 
ராகவ்

தலைநகர் டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் பல அதிரடி நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் அமலாக்கத்துறை செய்து வருகிறது. அதன்படி  இந்த கைது நடவடிக்கையில் தற்போது சிக்கியிருப்பவர் ஆந்திர மாநிலம்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டா.

ராகவ்

இவரை முதலில் விசாரணைக்காக வரவழைத்து விசாரணையின் முடிவில் அமலாக்கத்துறை ராகவ்வை கைது செய்துள்ளது. ஏற்கனவே பஞ்சாப்பில் வசித்து வரும்  தொழிலதிபர் கவுதம் மல்ஹோத்ரா மற்றும் ஆம் ஆத்மியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயரின் உதவியாளர் ராஜேஷ் ஜோஷி  இருவரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

ராகவ்

அப்போதே  கோவா தேர்தலுக்காக ஜோஷி நாயரிடம்  பணம் பெற்றதாக புகார் எழுந்தது. அந்த பணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணத்திற்கும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடுவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில் தான்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web