தறிகெட்டு ஓடிய கார் மோதி கர்ப்பிணி, கணவன் பலி!! கதறி துடித்த உறவினர்கள்!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளப்பட்டியில் வசித்து வருபவர் 27 வயது சுரேஷ். இவரது மனைவி 24 மனைவி காளீஸ்வரி . இவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுரேஷ் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். காளீஸ்வரிக்கு பள்ளபட்டியில் வளைகாப்பு நிகழ்த்திவிட்டு சுரேஷும் - காளீஸ்வரியும் தங்களது பெண் குழந்தை அபித்ரா ஸ்ரீயுடன் பைக்கில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ரெட்டியார்சத்திரம் அருகே கதிரணம்பட்டி என்ற இடத்தில், திருச்செந்தூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் இவர்களது பைக்கில் அசுர வேகத்தில் மோதியது. அ. இந்த கோர விபத்தில் கணவன் , மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
குழந்தை அபித்ரா ஸ்ரீ படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!