காதலனை மறக்க முடியல... கல்யாணமாகி 2 வாரம் தான்... ஒப்பந்த கொலையாளி மூலம் கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவுரையா மாவட்டத்தில் வசித்து வருபவர் 22 வயது பிரகதி யாதவ் . இவரும் அனுராக் யாதவ் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருப்பினும், அவர்களது காதலை பெற்றோர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து 2 வாரங்களுக்கு முன்பு பிரகதிக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திலீப் என்பவருக்கு அவரைக் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் பிரகதிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாத காரணத்தால் தனது கணவரைத் தீர்த்துக்கட்ட காதலருடன் சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, மார்ச் 19ம் தேதி திலீப் ஒரு வயலில் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போதும் அடுத்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திலீப்பின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரகதியும் அவரது காதலனும் திருமணத்திற்குப் பிறகு சந்திக்க முடியவில்லை. இதனையடுத்து கணவரைக் கொல்ல முடிவு செய்ததாகத் தெரியவந்தது. பின்னர் இருவரும் திலீப்பைக் கொலை செய்ய ராமாஜி சவுத்ரி என்ற ஒப்பந்தக் கொலையாளியை நியமித்து, அந்த வேலையைச் செய்ய அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாக போலீசார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!