பிரபல உணவகத்தில் திடீர் தீ விபத்து... 14 பேர் பரிதாப பலி !

மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய கொல்கத்தாவின் பால்பட்டி மச்சுவா அருகே ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் வேகமாக வெளியேற தொடங்கினர். கட்டிடத்தின் 4 வது மாடியில் சிக்கியவர்கள் ஏணியின் மூலம் வெளியேற முயற்சி செய்தனர்.
இதனால் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த தீயானது மளமளவென பரவத்தொடங்கியதில் ஓட்டலில் பலரும் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில மணி நேர போராட்டங்களுக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து ஓட்டலுக்குள் சென்று அதிகாரிகளுக்கு சோதனை செய்தனர். அப்போது தீயில் கருகிய நிலையில் 14 பேரின் உடலை அதிகாரிகள் மீட்டனர். உயிரிழந்த 14 பேரில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து த போலீசார் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!