கோர விபத்து... கட்டுமானப் பணியில் சாரம் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி.!

திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. அந்த குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உயிர்ழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!