மீன் வியாபாரி கொலையில் திருப்பம்.. காதல் விவகாரத்தில் மகளும் உடந்தையா?

 
ஜனகா

சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் கே.கே. நகரில் பார்த்திபன்(46)- ஜனகா(43) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ஜனகா ஆகிய இருவரும் ஓட்டேரி D.S.நகர் பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி  இருவரும் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல், மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த பார்த்திபனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த பார்த்திபன் உயிரிழந்தார்.

மேலும் இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஜனகாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த ஓட்டேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பகீர் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

ஜனகா

அதாவது, பார்த்திபன் வீட்டிற்கு அருகில் உள்ள சரவணன் என்பவரின் மகள், மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரும் ஊர்ஊராக சுற்றியுள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மற்றொருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரேம்குமார் சரவணனின் மகளை அழைத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சென்றுள்ளார். அங்கு அப்பெண் இன்ஸ்டாகிராமில் பழக்கமான மற்றொரு காதலன் அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து பிரேம்குமாரை ஒரு ஆண்டுக்கு முன்பு கொலை செய்துள்ளனர். 

ஜனகா

இந்த கொலைக்கு பார்த்திபன், அவரது மகள் தான் உடைந்தை அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கொலை செய்யப்பட்ட பிரேம்குமாரின் சகோதரரான பிரசாந்த், தன் தம்பியின் கொலைக்கு பார்த்திபனும் அவரது மகள்களும் தான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர்களை கொலை செய்ய திட்டம்போட்டு, பார்த்திபனை கொலை செய்தது தெரிய வந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web