கணவர் கண் முன்னே தகாத உறவில் இருந்த மனைவி.. நண்பருக்கு விழுந்த அரிவாள் வெட்டு..!!
சென்னை புது வண்ணார்பேட்டை ஜீவா நகரை சேர்ந்தவர் சங்கர்-புவனேஸ்வரி தம்பதி. சங்கர் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவருடன் வேலை பார்த்த நண்பர் உதயா அடிக்கடி சங்கரின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.அப்போது தனது நண்பரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு கடைசியில் அது ரகசிய உறவாக மாறியது. சங்கர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து அடிக்கடி புவனேஷ்வரியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். மனைவியின் செயல்கள் சரியில்லை என்பதை உணர்ந்த சங்கர், புவனேஸ்வரியை நோட்டமிட ஆரம்பித்தான்.
புவனேஸ்வரி தன் நண்பருடன் ரகசிய உறவில் இருப்பதை அறிந்த சங்கர் ஆத்திரமடைந்தார். இருவரையும் கண்டித்து, உறவை கைவிடும்படி எச்சரித்துள்ளார். ஷங்கர் புவனேஸ்வரியை பலமுறை எச்சரித்ததாக கூறப்படுகிறது . சம்பவத்தன்று வழக்கம் போல் உதயா தனது ரகசிய காதலியை பார்க்க நண்பனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சங்கர், கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினார்.
இதில் உதயாவுக்கு தலை, கழுத்து, தோள்பட்டையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சங்கர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், மனைவியுடன் ரகசிய உறவில் ஈடுபட்டதால் தான் நண்பர் உதயாவை கொன்றதாக சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!