அதிர்ச்சி!! மேம்பாலத்தின் அடியில் துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் உடல்!! மீண்டும் ஒரு ஷ்ரத்தா வாக்கர்?

 
ஷ்ரத்தா

கடந்த ஆண்டில் தலைநகர் டெல்லியில் லிவிங் டு கெதரில் இருந்த ஷ்ரத்தா வாக்கரை அவரது காதலர் அப்தாப் பூனாவாலா  வெட்டி  படுகொலை செய்தார். ஷ்ரத்தாவின் உடலை   35 துண்டுகளாக வெட்டி  அதனை வீட்டில் ப்ரிட்ஜில் வைத்து தினம் சில பாகங்களாக டெல்லியின் பல இடங்களில் நாய்களுக்கு வீசினார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  

ஷ்ரத்தா

இச்சம்பவத்திற்கு பின் இதேபோன்ற கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகி வருகின்றன. அந்த வரிசையில்  தற்போது டெல்லியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர்  லத்திற்கு அருகே பெண்ணின் உடல் பாகங்கள் பல துண்டுகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஷ்ரத்தா

பெண்ணின் தலை பாலத்தின் அருகே கிடைத்தது. அந்த பகுதியில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் அருகே உள்ள வனப்பகுதியில் பெண்ணின் எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்தன.   இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உடலை பாலத்தின் அருகே வீசியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web