பிரசித்தி பெற்ற சுற்றுலா தளத்தில் அதிர்ச்சி... தாஜ்மஹாலில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

 
தாஜ்மஹால்


 
உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால்.  தாஜ்மஹால் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. இங்கு  தினசரி ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். அந்த வகையில் செக்  குடியரசை சேர்ந்த ஒரு பெண்ணும் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றிருந்தனர்.  இந்த பெண் தற்போது காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார். 

தாஜ்மஹால்


அந்த புகாரில் ஏப்ரல் 3ம் தேதி பிற்பகல் அந்த பெண் தாஜ்மஹாலை பார்ப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அங்கு வந்த ஒரு மர்ம நபர் அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தரும் புகாரை அளித்துள்ளார்.

தாஜ்மஹால்
இச்சம்பவம் குறித்து  பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அத்துடன் அந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும்  கரண் ரத்தோர் என்பவர் தான் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web