காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டு வேறொரு திருமணம் செய்த வாலிபர்!

இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில், தனது காதலியை அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்து வந்த நிலையில், கர்ப்பமான காதலியைத் தவிக்க விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு சென்ற காதலன், அங்கே பெற்றோர் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரிய வந்து காதலி அதிர்ச்சியடைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் விவேக் (29). இவர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுடன் விவேக்கிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் இது குறித்து காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார்.
நாம் திருமணம் செய்து கொள்ளலாம்,அதற்கு முன் நான் ஊருக்கு சென்று பெற்றோரிடம் நமது காதல் விவகாரங்களை கூறி சம்மதம் பெற்று வருகிறேன் என கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்ற விவேக், திரும்பி வரவே இல்லை.செல்போன் மூலம் அழைப்பையும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பெண் தனது காதலன் குறித்து விசாரித்த போது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
இது குறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!