சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. புத்திசாலித்தனமாக செயல்பட்டு இளைஞரை சிக்க வைத்த சிறுமி!

 
மணிகண்டன்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளமுள்ளு வாடி கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார். வழியில் 13 வயது சிறுமி ஒருவர் பேனா வாங்குவதற்காக கடைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

ஏரிக்கரை ஓரமாக உள்ள சாலையில் சிறுமி சைக்கிளில் வருவதை பார்த்த மணிகண்டன், அவரை நிறுத்தி தனது நண்பனின் வீட்டிற்கு செல்ல முகவரி கேட்டுள்ளார். சிறுமி சைக்கிளை நிறுத்தி விட்டு முகவரி கூறியுள்ளார். அப்போது, மணிகண்டன் திடீரென சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மணிகண்டன்

இதனால் சிறுமி கூச்சலிட்டதால் இளைஞர் தனது பைக்கில் தப்பிச் செல்ல முயன்றார். எனினும் அந்த பைக்கின் பதிவு எண்ணை சிறுமி குறித்து வைத்துள்ளார். 
பின்னர் வீட்டுக்கு சென்ற சிறுமி இதனை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் அந்த பைக்கின் எண்ணையும் கொடுத்துள்ளார். அந்த இடத்துக்கு சிறுமியின் பெற்றோர், உறவினர் சென்றபோது மீண்டும் அதே இளைஞர் பைக்கில் திரும்பிவந்துள்ளார்.

இளைஞர் அவர்களை கண்டதும்  மின்னல் வேகத்தில் வாகனத்தை ஓட்டியுள்ளார். விடாமல் பெற்றோர்களும் அதிவேகமாக சுமார் 3 கிமீ தூரம் துரத்தி சென்ற நிலையில் அந்த இளைஞர் தப்பி சென்றுள்ளார்.

மணிகண்டன்

இதனை வீடியோ பதிவு செய்து சிறுமியின் பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் பைக்கின் பதிவு எண் உதவியோடு மணிகண்டனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web