கல்யாணம் பண்ணிக் கொடுத்தும் காதல் தொல்லைத் தந்த இளைஞர்... துண்டு துண்டாக வெட்டி புதைக்கப்பட்ட கொடூரம்!

 
புதைக்கப்பட்ட இளைஞர்

தனது தங்கையைத் தொடர்ந்து காதலித்து தொல்லைக் கொடுத்து வந்ததால், தங்கைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைத்த பின்னரும், தொடர்ந்து தங்கைக்கு காதல் தொல்லைத் தந்தவரை துண்டு துண்டாக வெட்டி, 6  அடி பள்ளத்தில் புதைத்த கொடூரம் திருவாரூரில் நிகழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மாதா கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆசிர்வாதம். இவருடைய மகன் திருமாவளவன் (21) அதே பகுதியில் அறுவடை இயந்திரத்தை ஓட்டி, பணி புரிந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது  மகன் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். 

புகாரைப் பெற்று கொண்டு, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆசிர்வாதத்தின் வீட்டின் அருகே இருந்த மதகு கட்டையில் ரத்தக் கறை இருந்துள்ளது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்த பகுதியில் சுற்றிலும் தேடிப் பார்த்ததில் திருமாவளவன் அணிந்திருந்த செருப்பும் இருந்துள்ளதை அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் மீண்டும் திருமாவளவனைத் தேடிய போது கோரையாற்று பகுதியில் நடு ஆற்றில் நாணல் செடி புதர் மண்டியுள்ள காட்டில் 6 அடி ஆழத்தில் திருமாவளவன் உடல் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

murder

கொலையாளிகள் அவரை கொன்று அவரது உடலை ஆற்றில் புதைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீடாமங்கலம் போலீசார், திருமாவளவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருமாவளவனின் நண்பர் ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீதரின் உறவினரான 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் திடு்க்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை வழக்கில் பிடிபட்ட 16 வயது சிறுவனின் சகோதரியை திருமாவளவன் சிறு வயது முதலே ஒரு தலையாய் காதலித்து வந்துள்ளார். இதனால் சிறுவனின் சகோதரியை திருமாவளவனின் தொல்லையில் இருந்து தப்பிக்க ஸ்ரீதருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

Needamangalam PS

ஸ்ரீதருடன் திருமணம் நடந்தேறிய பின்னரும், சிறுவனின் தங்கைக்கு திருமாவளவன் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரும், 16 வயது சிறுவனும் சேர்ந்து திருமாவளவனை கொன்று ஆற்றில் புதைத்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் அவரது உறவினரான 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web