கேபிள் ஒயரில் துணி காய வைத்த இளம்பெண் மின்சாரம் தாக்கி மரணம்!

 
கீர்த்தனா

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொல்ற மாதிரி, நம்ம மக்களுக்கு சம்சாரத்தைப் பற்றியும் சரியான புரிதல் கிடையாது. மின்சாரத்தைப் பற்றியும் சரியான புரிதல் கிடையாது. கரண்ட் கம்பத்துல தான் துணி காய போடுறது, எரும மாட்டை மேச்சலுக்கு கட்டி வைப்பதுன்னு இன்னமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கு. கரண்ட் வயரைத் தவிர பிற வயர்களில் எல்லாம் ஷாக் அடிக்காது என்கிற நம்பிக்கையில் நாமே நம்மை சமாதானப்படுத்திக்கறோம். அப்படியெல்லாம் கிடையாது. கேபிள் ஒயர்களிலும் மின்சாரம் தாக்கும். அப்படி ஏமாந்து தான், கேபிள் ஒயரில் துணி காய வைக்க முயன்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரைச் சேர்ந்தவர் நாகராஜ். அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறது. இவரது மனைவி கீர்த்தனா(30). இவர்களுக்கு 3 மகள்கள்  உள்ளனர். 

shock

இந்நிலையில் கீர்த்தனா, வழக்கம் போல் வீட்டில் துணிகளை துவைத்து விட்டு, துணிகளை காய வைப்பதற்காக சுவர் ஓரம் இருந்த கேபிள் டிவி ஒயரை ஈரக்கையுடன் பிடித்துள்ளார். அப்போது அதிலிருந்து கம்பி மூலம் கீர்த்தனாவின் உடலில் மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் வந்தவர்கள் கீர்த்தனாவை பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

Thiruvallur Taluk PS

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web