சென்னையில் பரபரப்பு... நைட் ஷிஃப்ட் வேலைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சக ஐடி ஊழியர் கைது!

 
 ஐ.டி நிறுவனங்கள்

தலைநகர் சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆண்கள், பெண்கள் என இரு தரப்பு பணியாளர்களுக்கும் இரவுநேர பணி என்பது கட்டாயம் உண்டு. இதனால் பெண்களும் இப்போது அதிகளவில் இரவு பணிக்கு சென்றுவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் இளம்பெண்ணுக்கு சக ஐடி நிறுவன ஊழியரே பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

 ஐ.டி நிறுவனங்கள்

நள்ளிரவு இவர் பணியை முடித்து விட்டு அங்குள்ள ஒரு கடையில் டீ குடிக்க வந்தார். அதே கடைக்கு தெலங்கானாவை சேர்ந்த சாம் சுந்தர் (29) என்ற ஐ.டி ஊழியர் டீ குடிக்க சென்றுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணுக்கு சாம் சுந்தர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அங்கேயே இளம்பெண் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாம் சுந்தர், தவறும் செய்து விட்டு அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். 

 ஐ.டி நிறுவனங்கள்

இது குறித்து அப்பெண் காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் அளித்தார். இதனையடுத்து செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், சாம்சுந்தரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web